இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு:வான் கதவுகள் திறப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக இரணைமடு நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் சில இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.இரணமடு நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 31 அடியினை எட்டியுள்ள நிலையில் குளத்தின் பாதுகாப்புக் கருதி மேலதிக நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புக்களின் பாதுகாப்புக் கருதி வான் கதவுகளை திறப்பது தொடர்பில் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர் இரணைமடு குளத்தின் வான் கதவுகள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், விவசாயப் பொறியியலாளர்கள் உட்பட பலரது கண்காணிப்பில் திறந்துவிடப்பட்டது
கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக இரணைமடு நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் சில இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.இரணமடு நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 31 அடியினை எட்டியுள்ள நிலையில் குளத்தின் பாதுகாப்புக் கருதி மேலதிக நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புக்களின் பாதுகாப்புக் கருதி வான் கதவுகளை திறப்பது தொடர்பில் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர் இரணைமடு குளத்தின் வான் கதவுகள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், விவசாயப் பொறியியலாளர்கள் உட்பட பலரது கண்காணிப்பில் திறந்துவிடப்பட்டது