தமிழ்,சிங்கள புதுவருட விழா. வடமாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சும் தென்மராட்சி பிரதேச செயலகமும் இணைந்து பாரம்பரிய விளையாட்டு, கலை நிகழ்வுகளை நடாத்தியுள்ளனர்.
மட்டுவில் வளர்மதி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இவ் விழாவில் கலந்து கொண்ட வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, அமைச்சின் செயலாளர் இ.இவீந்திரன் ஆகியோர் மங்கள விளக்கினை ஏற்றி வைத்து விளையாட்டின் முதன் நிகழ்வாக கபடிப் போட்டியினை கையிலாக கொடுத்து ஆரம்பித்து வைத்தனர்.
வெற்றியீட்டிய வீர,வீரங்கனைகளுக்கான பரிசில்களை தென்மராட்சி பிரதேச செயலர் திருமதி அஞ்சலிதேவி சாந்த சீலன் வழங்கி கௌரவித்து வைத்தார்.தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.கபடிப் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லுாரி 48-51 புள்ளி அடிப்பாடையில் வெற்றியீட்டியது.கிறிஸ் கம்பம் ஏறுதல் சாவகச்சேரி இந்துக்கல்லுாரி மாணவன் வெற்றியை தனதாக்கிக் கொண்டார்.இவ் விளையாட்டுப்போட்டியில் பாரம்மபரிய விளையாட்டுக்களாக கபடி,சாக்கு ஓட்டம்,முட்டி உடைத்தல்,தாச்சிப் போட்டி போன்றவை மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.தொடரந்து தமிழ்,சிங்கள கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
HD Videos
HD Videos